இந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யார்??


தமிழ் சினிமாவில் "ரஜினிகாந்த் "

ரஜினி இன்றைய இந்தியாவின் சூப்பர் ஸ்டார்,ஆசியாவில் இரண்டாவது 

சூப்பர் ஸ்டார்,நாளைய தமிழ் நாட்டின் முதலமைசர் என்று சொல்லி கொண்டே 
போகலாம் . இன்று இவர் இவளவு புகழுடன் இருந்தாலும் இவர் நடந்து வந்த 
திரையுலக பாதை கரடு முரடானது.வில்லனாக ஆரம்பித்த ரஜனியின் 
திரையுலக வாழ்க்கை இன்று யாருமே எட்டாத முடியாத அளவுக்கு 
கொண்டுபோய் விட்டு இருக்கிறது.அதற்கு கரணம் ரஜனியே தான்.
அவருடைய உருவமும் பிறப்பில இயற்கையாக இணைந்த குணாதிசயங்கள்,
நடத்தைகள் தான்.ரஜனி என்னும் மனிதன் சினிமாவில் நடிக்க வந்திருக்கா 
விட்டாலும் கூட  இவரின் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பா ஒரு ஹீரோவா தான் 
இருந்திருப்பார்.

எந்திரன் படம் வெளியாவதுக்கு  சில தினங்கள் முன் அமெரிக்க ஒன் லைன் 
பத்திரிக்கையான ஸ்லேட் ஒரு சிறப்பு கட்டுரை வெளியிட்டது.
"சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நீங்கள் இது வரை அறியாத பிகப்பெரிய நடிகர்"  என்னும் தலைப்பில் அமெரிக்கர்களுக்கு ரஜனியை அறிமுகப்படுத்தும்  
விதமாக அந்த கட்டுரை அமைந்திருந்தது.அந்த கட்டுரையில் ரஜனியின் 
புகழ்அவரின் படங்களின் லாஜிக் மீறல்கள்அவரின் படம் மூலம் 
குவியும் வருமானம் என்னவற்றை சற்று எள்ளல் கலந்த நடையுடன் 
கிராடி கென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதி இருந்தார்.

கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது,
"ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜக்கி சான் இருப்பதில் 
ஆச்சரியம் இல்லை.1980களில் இருந்தே சொந்தமாக படங்களை தயாரித்து,
இயக்கி,நடித்து வரும் அவர ரஷ் ஹவர்,கராத்தே கிட் போன்று பல 
ஹாலிவுட் வெற்றி படங்கள் மூலம் கோடிகணக்கில் சம்பாதிக்கிறார்.

ஆனால் ஆசியாவில் இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் ?என்று உங்களால் கண்டிப்பாக ஊகிக்க முடியாது .
வழுக்கை விழுந்த தலைநடுத்தர வயது கொண்ட அவர் இந்தியாவின் 
தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

இந்த ரஜனிகாந்த் வெறும் நடிகர் இல்லை,இந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத  ஒரு இயற்கை சக்தி மாதிரி.புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் முடித்தால் அவர்களுக்கு பிறப்பது ரஜனிகாந்த் எனலாம்.(If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth!).

அதாவது அவரது 
படங்களில் குறிப்பிடப்படுவது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
இதுவரை உங்களுக்கு இவரைத் தெரியவில்லை என்றால்வரும் 
அக்டோபர் 1-ம் தேதி தெரிந்து கொள்வீர்கள்அன்றுதான் அவரது 
எந்திரன் படம் உலகமெங்கும் வெளியாகிறதுஇந்தியாவில் இதுவரை 
தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் உருவானது 
எந்திரன்தான்இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கும் மேல் ஒரே நேரத்தில் 
வெளியீகிறதுஇந்த செலவுக்குக் காரணம்
சண்டைக்கு யூவான் வோ-பிங் (TheMatrix), 
அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), 
ஸ்பெஷல் எபக்ட்ஸுக்கு ஜார்ஜ் லூகாஸ்
இசைக்கு .ஆர்ரஹ்மான் (Slumdlog Millionaire) 
என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்
ஆனால்இந்த கலைஞர்கள்இவ்வளவு பட்ஜெட் எல்லாவற்றையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் 
பெரிதும் நம்பக் காரணம்இது ரஜினிகாந்த் படம் என்பதால் மட்டுமே!”-இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை.

உலக சினிமா வரலாறுகளை எடுத்து பார்த்தால் அமெரிக்காவின் 
சூப்பர் ஸ்டார் Clint Eastwood Revenge of the Creature, Francis in the Navy (1955) 
படங்களிலே ஆரம்பித்த இவரின் நடிப்பு பயணம் இன்றும் தொடர்கிறது.இவரின் 
வெற்றிக்கு காரணம் இயற்கையிலேயே இவருக்கு உள்ள ஒரு கவரும் தன்மை 
இதையே மூலதனமாக வைத்து நடித்து இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக 
இருக்கிறார்.உலகம் பூராக இவருக்கு மிகத் தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 
இவர் படத்தில் பேசும் பஞ்சு டயலாக்குகள் "Go ahead, make my day."  "Hell of a thing, killin' a man. Take away all he's got and all he's ever gonna have."  "And so, as our friends south of the border say, adios amigos." இன்றுவரை பிரபலம்.இவருடைய பஞ்சு வசனங்கள் திரையரங்குகளில் 
வந்தால் விசில் சத்தம்  காதை அடைக்கும் அந்த அளவுக்கு மிக தீவிரமான 
ரசிகர்கள் இன்றுவரை இருக்கிறார்கள்.

இவருக்கு அடுத்தபடியாக இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர் 
Johnny Depp .A Nightmare on Elm Street (1984 )படைத்தும் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை இன்று உலக புகழுடன் உயர்ந்து 
நிக்கிறது .உலகம் பூராக மிக மிக தீவிரமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் இவருக்கு .
Johnny Deep ஒரு படத்தில் நடித்தால் அவருக்காகவே அந்த படத்தை 
பார்க்க செல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள் அந்த அளவுக்கு பிரபலமானவர்
இவருக்கும் பிறப்பிலேயே ஒரு அனைவரையும் கவரும் தன்னை இருந்த 
டியாலேயே இவர் இன்றுவரை உலக சூப்பர் ஸ்டார் என்னும் உயர் 
பதவியில் இருக்கிறார்,இருப்பார் .

இவர்கள் இரண்டு பேரையும் மாதிரியே இந்தியாவில் ரஜினி என்னும் 
சூப்பர் ஸ்டார் தன் ஸ்டைல் என்னும் மந்திரத்தால் ஆண்டு கொண்டு 
இருக்கிறார்.இந்த ஸ்டைல் அவருக்கு பிறப்பிலிருந்தே இருக்கிறது .
என்ன தான் ரஜனி ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் இன்றுவரை பணத்தை 
வைத்து ஆடும் ஒரு பந்தய குதிரையாகவே இருக்கிறார்.இது ஒரு கவலையான 
விஷயம்.இவரை மூலனதமாகவே வைத்து பல கதைகள் அற்ற திரைப்படங்கள் 
வந்துருக்கின்றனரஜினி என்னும் மந்திரமே அந்த படங்களை ஓடவைத்து 
வெற்றி படமாக்கி இருக்கிறது.சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி 
கூட அப்படி தான் படத்தில் கதை இல்லை ரஜனியை நம்பி பெருமளவு 
பணத்தி போட்டு டமாக்கப்பட்டது படம் இந்தியாவில் சம ஓட்டம் ஓடியது.
ரஜனி போன்ற ஒரு சிலருக்கு  மட்டுமே பஞ்சு வசனங்கள் பேசும் தகுதி 
தமிழ் சினிமாவில் இருக்கிறது.

"நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி"என்று வேற 
ஹீரோ யாரவது சொன்னால் காமடியாக இருக்கும்ரஜனி இன்றுவரை நிலைத்து 
இருப்பதுக்கு மற்றொரு காரணம் என்னரும் பழைய சம்பவங்களை  மறக்காதது 
எண்ணனும் நினைவில் வைத்து இருப்பது,எளிமை,அடுத்தது அவருடைய மிக 
மிக தீவிர ரசிகர்கள்.M.G.R க்கு பிறகு ரசிகர்களின் கடவுள் ரஜனி தான் இன்றுவரை.

நானும் ஒரு காலத்தில் ரஜனியை மனதுக்குள் பிடித்திருந்தாலும் வெளியே 
ரஜனி ரசிகன் என்று சொன்னால் சமூகத்தில் ஒரு கேலியாக பார்ப்பார்கள் என்று 
சொல்லுறது இல்லை.என்னை போலவே நிறையே பேர் அப்படி தான் 
இருந்தவர்கள்.ஆனால் எந்திரன் படத்தில் ரஜனியின் நடிப்பை பார்த்து 
வியர்ந்து,ரஜனி என்றாலே பிடிக்காது என்று சமூகத்துக்கு காட்டிக்கொண்டு 
இருந்தவர்கள் எல்லாம் இன்று ரஜனி ரசிகர்கள் ஆகி வெளியே சமூகத்துக்கு 
வந்து நாங்கள் ரஜனி ரசிகர்கள் என்று சொல்ல தொடங்கிற அளவுக்கு ரஜனியின் 
நடிப்பு இருந்தது எந்திரன் படத்தில் .என்ன ஒரு நடிப்பு எந்திரன் படத்தில் நடித்த 
இந்த ரஜனியின் நடிப்பு இவளவு காலமாக ஏன் வெளியில் வரவில்லை ? என்ற 
கேள்விக்கு பதில் சொல்ல ரஜனியால் முடியாது.

இயக்குனர்கள் ரஜனிக்காக அமைக்கும் கதை அப்படி இருந்து விட்டது .
ஒரு பந்தய குதிரையாகவே பார்த்து விட்டார்கள் ரஜனியை.அண்மையில் 
ரஜனி கொடுத்த பேட்டியில் ஒரு இயக்குனர் "எப்பொழுது தேசிய விருது 
வாங்குவீர்கள் ? தேசிய விருது கிடைக்காதது வருத்தமாக இருக்கிறதா என்று 
கேட்டதுக்கு ?" ரஜினி சொன்ன பதில் "விருது கிடைக்காதது வருத்தம் தான்
எனக்கு விருது கிடைப்பது என்னைவைத்து இயக்கம் இயக்குனரின் கையில் 
உள்ளது "என்று கவலையாக சொன்னார்.

இயக்குனர்கள் கதை உள்ள படங்களில் ரஜனியை நடிக்க வைத்து ரஜனியின் 
திரையுலக வாழ்க்கை முடியும்,முன் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்று 
கொடுங்கள்.அது உங்களின் கைகளில் தான் இருக்கிறது..நடிகர் திலகம் சிவாஜி 
நகைச்சுவை நடிகர் நாகேஷ் மாதிரி விருதுகள் புறக்கனிக்கபட்ட நடிகர்கள் 
வரிசையில் ரஜனியும் வந்திட கூடாது ,என்பது என்னை போல கோடி கணக்கில் 
அவரை ரசிக்கும் ரசிகர்களின் வேண்டுகோள்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP