சொந்தங்கள் உங்கள் சேமம் எப்படி ?
நீண்ட இடைவெளி மீண்டும் உங்களை வலைப்பதிவின் ஊடாக சந்திக்கும் ஒருவாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்
இது ஒரு உண்மை பதிவு
கடந்த வருடம் வவுனியாவில் இருக்கும் போது ஒரு அழைப்பு வந்தது எதிர் முனையில் பேசியவர் ஒரு அருட்சகோதரி (SISTER )
என்னிடம் அவர் சொல்லிய விடயம் எங்கள் பராமரிப்பில் பல ஆதரவு இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களில் இந்த வருடம் சிலர் கா.பொ.த சாதாரண(GCE O/L) தரம் பரீட்சை எடுகிறார்கள் ஆகவே நீங்கள் ஒரு வகுப்பு(TUESTION) எடுக்க வேண்டும் என்றும்
பின்னர் கூறினார் அவர்களில் சிலர் செஞ்சோலையை சாந்தவர்கள் அவர்கள் பாடபுத்தங்களை தொட்டு அதிக காலம் நீங்கள் சிரமம் பார்க்காது படிப்பிக்க வேண்டும் நீங்கள் கற்பிக்கும் போது எளிமையாக புரியும் படி படிப்பிக்கவும் என்று கூறி முடித்தார்
நான் உடன் கூறிய பதில் நிச்சயமாக என்னால் முடிந்ததை செய்கின்றன்
அடுத்தநாள் அந்த வகுப்பு எடுப்பதற்காக சுமார் ஆறு /ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த நிலையத்துக்கு (வவுனியா இல் இருந்து கணேசபுரம் )சைக்கிளில் மிதித்து கொண்டு போனேன் காரணம்
நிச்சயம் ஓன்று அவர்களுக்கு உதவ வேண்டும் மற்றயது அந்த செஞ்சோலை பிள்ளைகளின் நிலையை உணர வேண்டும்
ஆம் நான் நினைத்ததுக்கு பதில் அன்று கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை என்ன என்று புரிய வில்லையா தொடர்ந்து படிங்கள்
அந்த நிலையத்தில் சுமார் எண்பது பெண்பிள்ளைகள் வரை இருந்தார்கள் அங்கு இருந்த கொட்டில்கள் அனைத்தும் தகரத்தாலும் பனை ஓலை ஆலும் அமைக்க பட்டிருந்தது
Read more...