எம்.ஜி.ஆர் ஒரு சகாப்பதம் --வாழ்வும் வரலாறும் ஒரு பதிவு --


      
சொந்தங்கள் எப்படி இருக்குறீங்க....??
இண்டைக்கு எம்.ஜி.ஆர். நினைவுதினம் ஞாபகம் இருக்குதா....??   
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

Read more...

மட்டகளப்பு,யாழ்ப்பாண பிரதேசவாதம்

--ஒற்றுமை இல்லா தமிழினம் ஈழ தமிழனின் கண்ணீர் கதை --
இலங்கை தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக உள்ள வடக்கு ,கிழக்கு, மலையகம் மட்டும் கொழும்பு பிரதேசம் விளங்கினாலும்  பிரதேசவாதம் காரணமாக  மக்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படுகின்றது
யார் பெரியவன்...?    

Read more...

இலவசமாக டொமைன் பெறலாம் வாங்க

தமிழில் முதலாவது Free டொமைன் பதிவு
சொந்தங்கள் எப்பிடி இருக்கிறீங்க..??
எனக்கு பல்கலைகழகத்தில் exam ஆகவே நீண்ட காலத்துக்கு பிறகு உங்களை சந்திக்கிறன் 
இன்று நங்கள் பார்க்க போக்கும் விடயம் டொமைன் .tkபெறுவது எப்படி

Read more...

ஈழ தமிழன் என்ன வியாபார பண்டமா.....??

ஆறாம்அறிவு இல்லாதவனுக்கு ஏழாம் அறிவு  தேவையா......??
Note:-
தயவு செய்து இந்த பதிவை தப்பான அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்
அண்மையில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் உண்மையில் ஒருநல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படம் என்பதை மறுக்கவோமறைக்கவோ முடியாது 
ஏன் எனில் இறுதில் சூரியா கதைக்கும் வசனங்கள் உணர்வை தூண்டுவனவாக இருப்பினும் அந்த உணர்வு வெகு சீக்கிரத்தில் மனதைவிட்டு போகமுடியதது என்பது அனைவற்கும் தெரிந்த உண்மை

Read more...

"சஞ்ஜீவ ஒலி" ஈழவானொலி என்று உலகுக்கு கூறு

ss
என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பாங்கள்
http://sanjeevaoli.com
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..
முயன்று முயன்று முன்னேறு...
முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய்
இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை. அந்த வகையில் 
முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து (முல்லைத்தீவு சுமந்த வலிகளை அறியாதவர்கள்  தமிழர்  இல்லை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வன்னி fm சஞ்ஜீவ ஒலிஇணைய வானொலி யானது
பாராட்டபடவேண்டியது போற்றபடவேண்டியது

Read more...

கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது.....?? --அதிரடி உண்மைகள்--

எதையும் நம்ப நாங்க என்ன லூசு பயல்களா ...............???
அதிரடி  உண்மைகள்


சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? 
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
கீழ் உள்ள பதிவு முகநூலில்(facebook) கள்ளச்சாமிகளை ஒழிப்போர் சங்கம் பக்கத்தில் பார்த்த கட்டுரை அதனை கொஞ்சம் எனுடைய கருத்துகளையும் சேர்த்து இந்த பதிவில் போட்டு இருக்கின்றன் படிச்சு போட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க 
நான் கடவுள் இருக்கிறதோ இல்லையோ இருந்தால்  நன்றாக  இருக்கும் என்ற கொள்கை கொண்டவன் 
கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது?
எதையும் நம்ப நாங்க லூசு பயல்களா ...............???
பிரேமானந்தாவில் ஆரம்பித்து நித்தியானந்தா வரை களி தின்னும் காவிகள் மண்ணிக்கவும் பாவிகள் இன்னும்கூட முளைக்கலாம். ஆனால் விழிப்பும், தெளிவும் பக்தர்களிடம் தேவை.
 திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 
என்பது போல மக்களிடம் விழிபுணர்வு இல்லாதவரை போலி பெருச்சாளிகள் வளர்ந்துகொண்டேதான் இருப்பார்கள்.
"ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்." நித்தியானந்தாவின் இப்படியொரு 'அல்வாவை' ஆன்மீகம் என்று நினைத்து ஏமாந்தவர்கள் எத்தனை பேர் 

Read more...

இனி அனைவருக்கும் இலவச இணையத்தளம் & டொமைன்

இலவச டொமைன் &இணையத்தளம்

தமிழ் சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? 
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
தீபாவளிக்கு பிறகு போடும் பதிவு  இது எனது பிந்திய தீபாவளிவாழ்த்துகள் படிச்சு விட்டு உங்கள் கருத்தகளை பதிவு செய்யுங்க உங்க கருத்துகள் எங்களை எழுத தூண்டும்                                                                                         
இது ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் தமிழில் இது போன்ற பதிவுவரவில்லை என்று நினைக்கிறான் முடிஞ்சா சொந்தங்கள் பகிர்ந்து கொள்ளுங்கோ                  
எல்லா தமிழனும் இணையத்தளம் நடத்தனும் நடத்தினால் தமிழ் வாழும் எண்டைக்கும் சாகாது என் இலங்கையில் எனை போல பலர் இருகிறாங்க தமிழை வாழவைக்க வீழ்வது வாழ்கை அல்ல 








1.முதலில http://co.cc செல்ல.   இங்கே உங்கள் டொமைன் பெயர்(yourname.co.cc) சரிபார்க்க   

Read more...

Facebookல் குடும்பமானத்தை விற்கலாம் வாங்க.....!! _பகுதி 2_




இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு,
நீங்கள் யார்..?
உங்கள் நண்பர்கள் யார்..?
உங்களுக்கு என்ன பிடிக்கும்..?
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

Read more...

Facebookல் குடும்பமானத்தை விற்கலாம் வாங்க.....!! _பகுதி 1_



இங்க பார்ரா நல்ல குட்டிடா...!
இது அவன்ட தங்கச்சிடா ........!!
இத பார்ரா நல்ல பிகர் ஒன்னு ....!!!
இது அவன்ட பொண்டாடிடா மச்சான்... ???

Read more...

மாவீரன் கடாஃபியை கொன்ற அமெரிக்கா இனி யாவது அடங்குமா

அமெரிக்கா துரோக பூமி 



அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும்
எச்சரிக்கை: கீழுள்ள படங்களும் காணொளிகளும் மிகக் கொடூரமானவை.
"சிலுவைப்போர்"
 கிறிஸ்தவ மதத்துக்காக போரிடும் நாடுகள் இஸ்லாத்தின் மீது புதிய சிலுவைப்போர் ஒன்றைத் தொடுத்துள்ளன. உலகெங்கும் இஸ்லாம் வாழ வேண்டும். இந்த யுத்தத்தில் இஸ்லாமிய இராணுவம் அனைத்தும் பங்குகொள்ள வேண்டும்.
கர்ணல் கடாஃபி

Read more...

கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !


“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”
“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.

Read more...

யாழ்ப்பாண மண்ணெண்ணெய் யுகங்களும் அரிக்கன் லாம்புகளும் ( மண்வாசனை -2)


தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

Read more...

எங்கட யாழ்ப்பாணதுக்கு கறண்ட் வந்த கதை( மண்வாசனை -1)




இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததி அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.

Read more...

"பனைமரக்காடு" ஈழப்படம் என்று உலகுக்கு கூறு

என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பங்கள் அண்டைக்கு மங்காத்தா எண்டு ஒரு லொள்ளு படம் வர நம்மட ஆக்கள் உடன விமர்சனம் போடவேளிக்கிடினம்


என்னடா நாங்க என்ன லூசுபயல்கள் எண்டு நினைச்சாங்களா நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல எண்டு எங்கள் பொடியன் ஒருத்தன் படம் எடுத்தால் பாராட்டுவோம் எண்டு ஒரு மனித பண்பு கூட இல்ல
நாங்க நமக்குள் நாம் சண்டை பிடிச்சும் பொறமை படும் தான் எல்லாம் தொலைச்சு போட்டு நிக்கிறம் மறந்து போச்சா  வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகுதம் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணி படத்தை வெற்றி பெறசையனும் எனக்கு என்ன யாராவது காசு தந்து எழுத பண்ணுறாங்க எண்டு நினைசியலா
இல்ல மச்சான் எங்கட படம் உலகத்தில ஓடினால் எங்களுக்கு தான் பெருமை தமிழன் ஒற்றுமை இல்லாதவன் எண்டு சொல்ல கூடாது நம்மட மண்ணுக்கு பெருமை

அண்டைக்கு ஒரு சின்ன கருத்து வேறுபாடு என் நண்பன் ஒருத்தன் சொன்னான் நீ(நான்) ஏன் eயாழ்ப்பாணம்
எண்ட பெயரை பாவிக்கிறாய் உண்ட பெயரை பாவி எண்டு மெசேஜ் போட்டன் அப்பிடி நம்மட தாய் பூமிய மறந்த யாழ்ப்பாண பயலுகள் இருக்கிறாங்க

எண்டா நம்மட பொடியள்  என்னவோ பிடிச்சு போனது போல போல வெப்சைட் ப்ளாக் நடத்துறாங்க நாங்கதான் புதியயாழ்ப்பாணம்(newJaffna)எண்டு கடுப்பு கதை கதைகிறாங்க
தங்கட சகோதரம் யாரோடும் கதைச்சா இல்ல லவ் பண்ணினால் அந்த கடுப்பில கெட்டு போய்ச்சு எண்டு புலம்புறாங்க இந்த பயலுகள் என்ன செய்வம்
அப்பிடி நம்மட தாய் பூமிய மதிக்கிற பயலுகள் இருக்கிறாங்க

ஏஏஏ(AAA) மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யாழ். மண்ணில் உருவாகும் செவ்வேளின் பனைமரக்காடு திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ந.கே.கேசவராஜாவின் இயக்கத்தில் பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்களை எமது மண்ணைச் சேர்ந்த கவிஞர் அஸ்வின், சி.பாலகுமார், ச.தட்சாயினி, ந.கே.கேசவராஜன் ஆகியேர் பாடல்களை எழுதியுள்ளனர்

Watch Video Song

கடந்த காலங்களில் தமிழர்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்துவதாகவும், அவர்களது உண்மையான வாழ்வைச் சித்தரிப்பதாகவுமே இந்தப் படம் அமையும் 
தமிழ்க் கலாசாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக எந்த வகையிலும் இந்தப் படம் அமையாது தென்னிந்திய  முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.அம்ரித் கதாநாயகனாக நடிக்கின்றார்.கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த அக்சராஅறிமுகமாகின்றார்.
முற்றிலும் யாழ் மண்வாசனையோடு வெளிவரும் இப்படத்தில் இலங்கை கலைஞர்களும் நடிக்கின்றனர்.








தீபாவளி தினத்தில் பனைமரக்காடு திரைப்படத்தை இலங்கையிலுள்ள முன்னணி திரையரங்குகள் பலவற்றிலும் சர்வதேச ரீதியாகவும் ஏக காலத்தில் காட்சிப்படுத்தப்படும் 

பல்லவி

உயிரிலே உன்பார்வையால் பூ பூத்ததே
நெஞ்சிலே உன்வார்த்தைகள் தீ மூட்டுதே

அனுபல்லவி

மேகம் பூமழை பொழியுதே...- என்
யாகம் அதனாலே அழியுதே...
போகும் திசையாவும் மறையுதே - என்
தேகம் விழிநீரில் கரையுதே...

மனம் மாறுமோ...
ரணம் ஆறுமோ...
உன் மௌனம்தான் பதில் கூறுமோ.....


சரணம்-01

நெஞ்சில் ஆசையை பொத்திவைக்கிறாய்
நெருங்கி வருகிறேன் கத்திவைக்கிறாய்...
நெருஞ்சி முள்ளைப்போல் நெஞ்சில் தைக்கிறாய் நீ.......

நினைத்து நினைத்தெனை உருகவைக்கிறாய்
நிலவைப் போன்ற நீ கருகவைக்கிறாய்...
உணர்வில் கலந்து நீ உயிரில் வைக்கிறாய் தீ...

நான் காதல்பூக்கள் தருகிறேன்
நீ கல்லைதானே எறிகிறாய்
நான் அன்பை ஏந்தி வருகிறேன்
நீ அரிவாள் ஏந்தி வருகின்றாய்....


சரணம்-02

கண்கள் கொண்டு தீ மூட்டிவைக்கிறாய்
காதல் ஜன்னலை பூட்டிவைக்கிறாய்
வன்மம் இன்றியே வாழ்ந்து பார்க்கலாம் வா..

கனவில் வந்து நீ காதல் கொள்கிறாய்
நேரில் கண்டதும் விலகிச் செல்கிறாய்
தயக்க மேனடி உன்னை என்னிடம் தா..

உரிமை நானும் கேட்கிறேன்
என்னுயிரை நீயும் கேட்கிறாய்
நான் ஆசைகொண்டே பார்க்கிறேன்
என்னை எதிரிபோன்றே பார்க்கின்றாய்.....




Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP