உண்மை காதல் வாழ்க tamil ture love

காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க...♥♥♥இந்த 21 ம் நூறாண்டில் ...
சில ஆண்களை /பெண்களை தவிர பல ஆண்கள் /பெண்கள் தாங்கள் துணையை தவறாக தெரிவு செய்கிறார்கள் பெண்களிடம் அழகை எதிர் பார்க்கும் சில ஆண்கள் , தவறான முடிவை தெரிவு செய்கிறார்கள்.இது பெண்களுக்கும் பொருந்தும்
அன்பை மட்டும் எதிர் பார்க்கும் பெண்களில் சிலர் வெற்றி பெறுகின்றனர் .
அது எவ்வாறு..............? இங்கே பார்போம் 

Read more...

ஆடி அமாவாசை --அப்பாவுக்காக.....! aadiamavasai tamil


                                                                                                                                                                                                               அமாவாசை
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

ஆடி அமாவாசை
பித்ருக்களை வழிபட ஏற்ற காலம் ஆடி மாதம் இந்த மாதமே ஒரு புண்ணிய காலமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

Read more...

காதல் எனும் பெயரில் காமம் ---நம்ம Galle face காதல்


காதல் எனும் பெயரில் காமம் கலக்கப்படலாமா............?

வெயிலின் உக்கிரம் தணிந்து மாலை வேளை ஆரம்பிப்பதற்கான அறிகுறி, அந்த கடற்கரை எப்போதும் மக்களின் ஆரவாரம் நிரம்பியே காணப்படும். எப்போதும் போல் காதலர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்து தமது காதலை வெவ்வேறு விதமாக வளர்த்துக் கொண்டிருந்தனர்.

Read more...

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2

”வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் என்ற அழுக்கைக் கழுவுவதற்கு"இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது.என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


Read more...

அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்


" இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது. "

Read more...

காதலிக்கிற ஆண்கள் பெண்களைப் பற்றி தெரிஞ்சு கொள்ளுங்க

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள்.
ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள்நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

Read more...

யூத் ஸ்பெஷல் -- நாளைய உலகம் உங்கள் கையில்



கட்டிளம் பருவத்தினரே  உங்களைப் பற்றி................!!

உங்களை எதிர்காலத்திற்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்....................??

'நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்' இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர்.


குடும்ப அளவில் நோக்கினால் 'நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை' எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன.

இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன.

Read more...

காதல் உண்மையா....? HORMONEகளின் அட்டகாசமா...?x-ray Report


பதினாறு வயதில் காதல் ??

துள்ளிதெறிக்கும் வயதாம் பதினாறு வயது.. HORMONEகளின் அட்டகாசம் எட்டிபார்கும் காலம். கல்வி எனும் ஒரு விடயம் ஒரு மனிதனின் வாழ்கையையே திசைமாற்றும் பருவம். சவால்களும் இலட்சியஙளும் நிறைந்த ஒரு போர்காலம்.. இவை யாவற்றின் மத்தியிலும் காதல் எனும் மெல்லிய உணர்வு ஒரு மனிதனுடைய மனதுள் பூக்கும் பருவமும் இதுவே என்பதிலும் எனக்கோ ஐயமில்லை..இதையெ "உனக்கும் எனக்கும்" என்ற ஜெயம் ரவி நடித்த படத்தின் ஒரு பாட்டின் வரிகளில் "16's தொடங்கி 60's வரைக்கும் SOMETHING இன்றி யாரடா ?" என்று கூறுகிறது.

Read more...

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்.........!

அதிரடி  உண்மைகள்
கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக் கணக் கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார்.' - இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப் போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. 'நான்தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம்' எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் 'கல்கி பகவான்'!!


இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலிச்
சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தகவல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வநாத் சுவாமியை சந்தித்தோம்.

Read more...

கூகிள் பிளஸ் பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் வெல்வது யார் ....?


இணைய தொழில்நுட்பத்துறையில் இரு இணைய ஜாம்பாவான்கள் சூப்பராக மோதிக்கொண்டனர்.
ஒரு பக்கம் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை அறிமுகப்படுத்தியது.
மறுமுனையில் கூகிள் பிளஸ் ஐ அறிமுகப்படுத்தியதுடன் ப்ளாக்கர் பிகாஸா போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் உடனடியாக அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வேலை செய்ததாக தெரிகிறது. ஆனால் கூகிள் பிளஸ் பக்கத்திற்கு செல்லும் பலருக்கு "Keep Me Posted" என்றே வருகிறது என்கின்றனர்.

Read more...

புரிதலுடனான உறவுகளே


படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்

பரிதவிப்பு.....

பழகியவருக்கும் தெரியவில்லை-இவன்

மனத்துடிப்பு...

விலகியது உன் அன்பு 

போதாது என்று அல்ல...

நீ கொண்ட அன்பு

அளவு கடந்துவிட்டது என்பதற்காக...

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

வாழ்க்கை என்னும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோக்ஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும் விரும்புகின்றோம். மனதுக்கு பாரமான எந்தவொரு கவலையான சம்பவங்களையும் மறக்கவே முயற்சிக்கின்றோம்.

Read more...

மற்றவருக்காக வாழ்ந்த அன்னை தெரேசா

]

அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

Read more...

வரலாற்றில் இந்தியா _ 2020 இல் எப்படி ----??

இந்தியா (India) 


இந்தியா (India)தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7000 கி.மீ. நீண்ட கடல் எல்லைக் கொண்டது .வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லையைப் பகிரிந்துக்கொண்டுள்ளது . இலங்கையும், மாலத்தீவும் இந்திய கிழக்கில் வங்காள விரிகுடாவையும், மேற்கில் அரபிக் கடலையும் தெற்கில்இந்தியப் பெருங்கடலையும் கொண்ட ஒரு தீபகற்பம் ஆகும்.

Read more...

செல்போனின் தரத்தை அறிவது எப்படி ? check model (IMEI)

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம்.

அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

Read more...

மின்னஞ்சல்களை பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி...?how to store E-mail in your flash

மின்னஞ்சல் சேவை என்பது இணைய இணைப்பு இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். மின்னஞ்சல்களை அனுப்பவும் படிக்கவும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவைப்படும். ஒரு வேளை இணைய இணைப்பில்லாத இடங்களில்/ நேரங்களில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை காண வேண்டும் எனும் போது என்ன செய்ய முடியும்?
இதற்கென இருக்கும் ஒரே வழி POP3 Clients என்று சொல்லப்படும் மென்பொருள்களின் வழியாக இணைய வசதி இருக்கும் போது எல்லா மின்னஞ்சல்களையும் கணிணிக்குத் தரவிறக்கிவிட்டு பின்னர் நேரம் இருக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக Microsoft Outlook, Thunderbird போன்ற மென்பொருள்களைச் சொல்லலாம். முக்கியமான மின்னஞ்சல் சேவைகளான ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை இவ்வகையான POP3 சேவைக்கு ஆதரவளிக்கின்றன.

Read more...

யாழ்ப்பாணப் பெட்டைகளும் பேஸ்புக் சேட்டைகளும்.....???


“நான் விடிய எழும்பினவுடன தோட்டத்தில அறுவடை செய்து, நாய்க்கு சாப்பாடு போட்ட பிறகு தான் மற்ற வேலையெல்லாம்” இதை சொன்னது விவசாயி இல்லயுங்கோ….. ஒரு கம்பஸ் பெட்டை. இதை கேட்டவுடன யாழ்ப்பாணத்தில மீண்டுமோர் விவசாயப்புரட்சி வரப்போகுதென்டு தானே நினைக்கத்தோணுது… நானும் அப்பிடித்தான் நினைச்சு ‘என்னக்கா சொல்லுறியள்’ எண்டு விசாரிச்ச பிறகுதான் தெரிஞ்சிச்சு அவ சொன்னது பேஸ்புக்ல வாற ‘BARNBUDDY’ விளையாட்டை எண்டு.
இப்ப யாழ்ப்பாணத்தில நடக்கிறது பேஸ்புக் கலாச்சாரம் தானுங்கோ. இப்பிடித்தான் ஒரு தாய்க்காரி சொன்னா, ‘எண்ட பெட்டை கொம்பியூட்டரில பெரிய படிப்பு படிக்கிறாள்… அவள் இரவு பிரக்ரிஸ் பண்ணிட்டுப் படுக்க சாமம் ஆகுது’ எண்டு. நானும் அப்பிடி என்ன பெரிய படிப்பு படிக்கிறாள் எண்டு பார்த்தானே தெரியுது, பெட்டை பேஸ்புக்கில மினக்கெடுறது….

Read more...

இரவீந்திரநாத் தாகூரின் பல்துறை ஆளுமை


இந்தியாவில் பல நூறு பல்துறை அறிஞர்களையும் கலைஞர்களையும் உலகிற்கு அளித்ததோடு அடிமை இருளில் மூழ்கிப் பெருந்துயரில் வாடிய இந்தியர்களுக்கு ஓர் அடையாளத்தைத் தந்த முதல்வர் என்ற பெருமைக்குரியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். அவரின் நூற்றிஐம்பதாவது பிறந்த தின விழாவை அனைத்துலக மக்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாகூரின் பல்துறை ஆளுமை பற்றிய கட்டுரையாக அமைகிறது.அவருடைய இலக்கியங்கள், கட்டுரைகள்,கலைப்படைப்புகள், நூல்கள் போன்றவற்றைக் கொண்டு நோக்குகின்ற போதே தாகூரின் பல்துறை ஆளுமையை அறிந்து கொள்ளலாம்.

Read more...

சுதந்திர தென்சூடானின் மலர்வு.....நமக்கு சொல்பவை

தென்சூடானின் மலர்வு............

உலகின் 193வது தேசமாக பிறப்பெடுக்கின்றது தெற்கு சூடான்.ஆபிரிக்க கண்டத்தில் அளவில் பெரியதும் – கனிம வளம் கொண்டதுமான நாடு சூடான். பல்லாண்டுகளாக வடக்கு – தெற்காக பிளவுண்டு உள்நாட்டு போராக வெடித்து, விடுதலைப் போராக முடிவுக்கு வந்தபோது 1.5 மில்லியன் மக்கள் தம் உயிர்களை இழந்திருந்தனர்.
2005ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாடு குருதி தோய்ந்த இந்த உள்நாட்டுபோரை முடிவுக்கு கொணர்ந்தது. அத்துடன் சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகள் தோன்றியபோதும் அமைதி உடன்பாடு முறிபடாமல் பேணபட்டதால் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மக்கள் ஆணையும் பெறப்பட்டது.
அதன்படி யூலை 9ம் நாள் ‘தென் சூடான்’ என்னும் புதிய தேசம் பிறப்பெடுத்தது.
அதனை வட சூடானும் ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன் தலைநகரம் 
Juba.

Read more...

மச்சான் இது "காதலா காமமா" 1மே புறியல

வாலிபப் பருவம்  சவால் பல நிறைந்த ஒரு பருவம். நினைத்ததை சாத்திதே ஆக வேண்டும் என திடத்துடன் சுற்றும் காலம். எனக்கு கீழே தான் உலகம் என்ற இறுமாப்புடனேயே காலம் கழியும்.
ஒருவனை உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் ஆக்கக் கூடியது இந்தக் காலப் பகுதி. இக் காலத்தில் சேரும் நண்பர் வட்டமே அதனைத் தீர்மானிக்கும்.

Read more...

பெண்களை easy'a correct பண்ண idea...?

பெண்களை எப்படி மடக்குவது என தெரியாமல் முழிக்கும் நண்பர்களுக்கு, இதோ .....!!

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள்

Read more...

"பேஸ்புக்" ஆல் சீர்கெடும் சமூகம் --எச்சரிக்கை--??

அண்மைகாலமாக இளைஞர்களின் விழிகளில் விரலை விட்டு ஆட்டும் கொடுர குடைச்சலாக உருமாறி உள்ளது சமூக வலைத்தளங்கள் . அதிலும் முக்கியமாக பேஸ்புக் வலைத்தலமானது தற்கால இளைஞர்களின்தாரகமந்திரமாகஉள்ளது
கட்டாயம் வாசிக்க வேண்டியது.

Read more...

யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னி ஊடாக வவுனியாக்கு முதல் பயணம் 24.10.2009 .

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 வருடங்கள் இந்த மண்ணிலே வளர்த்தவன். இப்பொது 2 வருடங்கள் கல்வி நிமிர்த்தம் வவுனியாவில் வசித்துவருகிறேன்.
A-9 ஊடாக  வவுனியாசெல்ல பயணத்தை ஆரம்பித்தேன். பயணம் ஆரம்பத்திலேயே களை கட்டியது. பஸ்சில் பயணிக்க நான் சென்று அடைந்த இடமோ ரயில் நிலையம். அப்போதே

Read more...

யாழ்ப்பாண சமூகச் சீர்திருத்தவாதிகள் -- பாகம் 2

அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக.....

 
உங்கள் பார்வைக்கு..

Read more...

பாதங்கள் அழகாக இருக்க & அழகான கூ‌ந்தலு‌க்கு ‌செ‌ய்ய வே‌ண்டியது

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.

Read more...

முகப்பரு இனி இல்லை /தடுக்கலாம் 100%






பொதுவாக முகப்பருக்கள் ஆண் பெண் என்ற இரு பாலாரிலும் 13-19 வயதுக்குடப்பட்ட விடலைப் பருவத்தினரையே அதிகமாக பாதிக்கும். அதற்கும் மேற்பட்ட வாலிப பருவத்தினரையும் விட்டு வைப்பதில்லை.

Read more...

நோக்கியா N சீரீஸ் (Nokia n series format)

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?
உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?
கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்

Read more...

யாழ்ப்பாணம் காணொளி (video பாடல் )



Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP