யாழ்ப்பாண அரசர்களன் பட்டியல்

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது.
அரசர் பெயர்
கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி
கி.பி 1210
குலசேகர சிங்கையாரியன்
கி.பி 1246
குலோத்துங்க சிங்கையாரியன்
கி.பி 1256
விக்கிரம சிங்கையாரியன்
கி.பி 1279
வரோதய சிங்கையாரியன்
கி.பி 1302
மார்த்தாண்ட சிங்கையாரியன்
கி.பி 1325
குணபூஷண சிங்கையாரியன்
கி.பி 1348
வீரோதய சிங்கையாரியன்
கி.பி 1371
சயவீர சிங்கையாரியன்
கி.பி 1394
குணவீர சிங்கையாரியன்
கி.பி 1417
கனகசூரிய சிங்கையாரியன்
கி.பி 1440

1450ல் கோட்டே அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான்
சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள்
கி.பி 1450
1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது
கனகசூரிய சிங்கையாரியன்
கி.பி 1467
சிங்கை பரராசசேகரன்
கி.பி 1478
சங்கிலி
கி.பி 1519
1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்
புவிராஜ பண்டாரம்
கி.பி 1561
காசி நயினார்
கி.பி 1565
பெரியபிள்ளை
கி.பி 1570
புவிராஜ பண்டாரம்
கி.பி 1572
எதிர்மன்னசிங்கம்
கி.பி 1591
அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக)
கி.பி 1615
சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக)
கி.பி 1617
1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP