போராட்டம் தான் வாழ்க்கை, முடியும் என்பது மூலதனம் முடியாது என்பது முட்டாள்தனம்

சொந்தங்கள் வணக்கம்,நீண்ட காலத்தின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.
"போராட்டம் தான் வாழ்க்கை, முடியும் என்பது மூலதனம் முடியாது என்பது முட்டாள்தனம் " என்பது பலரது மகுட வாக்கியம் ஆனால் அதில் 100% உண்மை உள்ளது பலருக்கு புரிவது இல்லை . அண்மையில் ஒருநண்பன் தற்கொலை செய்து கொண்டான் அவனை பொறுத்த வரை இனி அவனுக்கு எதுவும் தெரிய போவதும் இல்லை, அது போல் ஒரு கவலையும் அவனுக்கு இல்லை  என்பதும்  உண்மை  ஆனால் பெற்றவர் நண்பர் என பலருக்கு இது ஈடு செய்ய முடியாத ஓன்று.
அதே நேரம் அது பலருக்கு "ச்சே என்ன வாழ்க்கை?" என்ற ஒரு வெறுப்பையும்
 "மரணம் தான் அனைவருக்கும்" என்ற ஒரு விழிப்புணர்வையும் உருவாக்குகிறது .
அண்மையில் ஒரு பிரசங்கம் அதில் கலந்து கொண்டவர் சொன்னார் வாழ்க்கைஇல் என்ன எண்டாலும் அளந்த அளவுதான் யானை பெரிய விலங்கு பலம் மிக்கது அதனால் முடியாது என்று சொல்லுவதுக்கு  ஒன்றும் இல்லை அது போல ஏறும்பு மிக சிறிய விலங்கு அதன் பலம் அனைவரும் அறிவர்.
1)எறும்பு தூக்கும் பொருளை யானையால் தூக்க முடியாது அது போல் யானை தூக்கும் பொருளை எறும்பால் தூக்க முடியாது
2)எறும்பால் யானைக்கு மரணம் ஏற்படுத்த முடியும் அதுபோல் யானையால் எறும்புக்கு மரணம் ஏற்படுத்த முடியும்.
இதுபோல் ஒவ்ஒருவருக்கும் அவர்களுக்கு உள்ள வழங்கபட்டுள்ள திறமை ஆற்றல் கொண்டு இந்த உலகை வெல்லுவதுக்கு ஆன தகுதி உண்டு இதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
என்ற செய்தி தான் அந்த பிரசங்கத்தின் முடிவு.

நண்பன் தன் கொள்கையில் வென்றது போல் எடுத்த முடிவு என்றும் ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற தற்கொலை மரணம் எதுக்கும் முடிவல்ல என்பது புரிய வேண்டும் .
"ஒரு வாழை குலை பழுத்ததும் மரத்தை வெட்டுவது இயற்கை  ஆனால் காற்றினால் அது இடையில் முறிவது ???"

 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP