காதல் Vs ‌திருமண‌ம்


*பசி,உறக்கம் மறக்க வைப்பது காதல்.
*இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்



*சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
*நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.




*உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
*அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

*காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
*டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

*எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
*நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

*உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
*ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்

*நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
*கல்யாணம் என்பதுபழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

*உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
*ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

*காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
*திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

*குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
*அவர்களின் முரட்டுப் பிடிவாதம்கல்யாணம்.

*ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
*செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

*எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
*எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

*அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
*கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

*பல மணி நேர தொலைபேசி உரையாடல்
*திருமணத்திற்குப் பின்பும்தான்,அவரவர் நண்பர்களுடன்.

*போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
*போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP