தன்னை கடவுள் என்று கூறும் இவருக்கு என்ன ? Who is that சத்ய சாய்பாபா ? x-ray report



சாக கிடந்த, பாபா கடவுளா.......?... 
இல்ல....அவர காப்பாத்த போராடின வைத்தியர்கள் கடவுளா.......?


சத்ய சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார்?
தன்னை கடவுள் என்று கூறும் இவனுக்கு என்ன ???


சத்யா சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.
சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது வானில் இருந்து வந்த அதிசய ஒளி ஈஸ்வரம்மா வயிற்றில் புகுந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஈஸ்வரம்மா கர்ப்பம் ஆனார். 
குறிப்பிட்ட காலம் கடந்ததும் அவருக்கு குழந்தை பிறந்தது. சத்ய நாராயண ராஜு என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள். சிறு பருவத்திலேய சாய்பாபா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் பிரகாசமாக இருந் தார்.
1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது. இதனால் அவர் சில மணி நேரம் தன்னிலை மறந்தவராக மாறிவிட்டார். அதன் பிறகு சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது என முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார். 
இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறினார்கள். அதற்கு சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்றனர். பலன் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து “ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய்” என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். 
சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார். இந்த நிலையில் சத்யசாய்பாபா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் அனைவரும் வியப்படைந்தனர்.
இந்த தகவல் சுற்று வட்டார பகுதி முழுவதும் பரவியது. அதுவரை சத்ய நாராயணராஜுவாக இருந்த அவர் சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார். மக்கள்  திரண்டு வந்து சாய்பாபாவை பார்த்தனர். அவர்களுக்கு சாய்பாபா அருளாசி வழங்கினார். பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி காட்டினார். 
அதன் பிறகு சாய்பாபாவே சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றார். அவரை காண வந்த பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறின. தனது கை,கால்களில் இருந்தும் உடல்களில் இருந்தும் திடீரென பல்வேறு பொருட்களை எடுத்து காட்டி எல்லோரையும் அதிசயிக்க வைத்தார்.
இதனால் அவரது புகழ் தென்இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 1944-ம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் கோயில் கட்டி கொடுத்தனர். அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். 
இதனால் விரிவான கோவில் கட்டப்பட்டது. அதற்கு பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டினார்கள். 100 ஏக்கர் நிலம் கோவிலுக்காக வாங்கப்பட்டது. 1948-ல் அங்கு சாய்பாபா ஆசிரமத்தை கட்டினார். 1954-ல் சிறு ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினார்.
அவருடைய அருளாசி, அதிசயங்களால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் சாய் பாபாவுக்கு பக்தர்கள் உருவானார்கள். இந்தியா முழுவதும் சாய்பாபா சுற்றுப்பயணம் செய்தார். தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார். அவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் கருதினார்கள்.
இந்தியா முழுவதும் சத்ய சாய்பாபா ஆசிரமங்கள் உருவாயின. 137 நாடுகளில் அவருக்கு பக்தர்கள் உருவானார்கள். பக்தர்கள் ஏராளமான பணத்தை ஆசிரமத்தில் கொட்டினார்கள். இவற்றை பொது மக்களின் நல்ல காரியங்களுக்காக செலவிட்டார். 
குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் செலவிட்டார். தற்போது உலகில் 114 நாடுகளில் 1200 இடங்களில் சத்ய சாய்பாபா மையங்கள் உள்ளன. சாய்பாபா ஆசிரமத்தின் சொத்து மதிப்பு ரூ.2 1/2 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.



சாய்பாபாவின் பில்லியன் சொத்துகளுக்கு மோதல் ஆரம்பம்

சத்ய சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார்? ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் எதிர்காலம் என்ன என்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.1 இலட்சம் கோடி அளவுக்கு சொத்துக்களைக் கொண்டுள்ளது சாய்பாபா அறக்கட்டளை. இதை நிர்வகிப்பது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பாபாவின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.பாபா உடல் நலம் குன்றி படுத்த படுக்கையான நாள் முதலே இது வெடிக்கத் தொடங்கிவிட்டது.

இதன் காரணமாகவே பாபாவின் உடல்நிலை குறித்த விவரங்களைக் கூட அவரது பக்தர்களால் அறிய முடியாமல் போய்விட்டது.பெரும் மர்மமான சூழலிலேயே சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஆந்திர மாநில அரசு களத்தில் இறங்கி பாபாவின் நிலை குறித்தும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் உண்மை தகவல்களை அறிய அதிகாரிகள் குழுவை நியமிக்க நேரிட்டது.

அறக்கட்டளையின் தலைவராக இதுவரை சாய்பாபாதான் இருந்துவந்தார்.அவர் மட்டுமே காசோலைகளில் கையெழுத்திடக் கூடிய அதிகாரம் பெற்றவராக இருந்தார். இதன் காரணமாக அறக்கட்டளையின் அடுத்த கட்டம் பெரும் தேக்க நிலையை சந்தித்துள்ளது. பிற சாமியார்கள்,மதத்தலைவர்கள் போலல்லாது சாய்பாபா தனது குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக் காத்து வந்தார்.எனவேதான் அவர்கள் தற்போது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு கேட்கின்றனர்.இவர் அறக்கட்டளையில் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.தனக்கு நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பு தரவேண்டும் என்று கோருகின்றார் ரத்னாகர்.இவருக்கு முன்பு இவரது தந்தை ஜனகராமையா அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்தார்.அவரது மறைவைத் தொடர்ந்து ரத்னாகர் உறுப்பினரானார்.

அதேசமயம் அறக்கட்டளை செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சில உறுப்பினர்கள் பல்வேறு பிரமுகர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து அதன் மூலம் அறக்கட்டளையை நிர்வகிக்க வலியுறுத்தி வருகின்றனர். சக்கரவர்த்தியின் யோசனைக்கு அறக்கட்டளை உறுப்பினர்களான முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி,முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் எஸ்.வி.கிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.சக்கரவர்த்தி ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆவார்.பாபாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தனது பதவியை துறந்தவர் ஆவார்.

தற்போது இந்தப் பிரச்சினையில் அரசியலும் கலந்துவிட்டதால் பெரும் குழப்பநிலை காணப்படுகிறது. கடந்த 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி அனந்தப்பூரில் உள்ள அறநிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில்தான் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.இந்த அலுவலகமும் தற்போது பாபா அறக்கட்டளை விவகாரம் குறித்து பெருத்த மௌனம் சாதித்து வருகிறது.யார் அறக்கட்டளையை அடுத்து நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அலுவலகம்தான் கூறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறக்கட்டளை பதிவு ஆவணத்தில் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நிறுவன அறங்காவலர்அதாவது சாய்பாபாஅனுமதி பெற்றே செய்யவேண்டும்.நிறுவன அறங்காவலருக்கே மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் நிறுவன அறங்காவலர் இல்லாத பட்சத்தில் அறக்கட்டளையில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.

தற்போதைய நிலையில் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் திட்டம் இல்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.இதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைவரப்படி சாய்பாபாவின் அடுத்த வாரிசு யார் என்பது குறித்து அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.சிலகாலம் வரை அறக்கட்டளையே நிர்வாகத்தை கவனித்து வரும் என்றும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகுதான் அடுத்த வாரிசு அறக்கட்டளையின் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிகிறது.

சாய்பாபா மரணத்தில் சர்ச்சை: மரணத்திற்கு முன்பே சவப்பெட்டி ஓர்டர் செய்த மர்மம்

சத்ய சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் முடிவதற்குள் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.
உண்மையில் அவர் இறந்தது ஏப்ரல் 24 ம் திகதி தானா அல்லது அதற்கும் முன்பாகவா என்ற சந்தேகத்தை ஊடகங்கள் கிளற ஆரம்பித்துள்ளன. காரணம் சத்யசாய் அறக்கட்டளை சார்பில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே அதிக விலைக்கு ஒரு சவப்பெட்டிக்கு ஓர்டர் கொடுத்து வாங்கியது தான்.
அறக்கட்டளையின் சக்தி வாய்ந்த மற்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியாமல் இந்த செயலை செய்துள்ளனர் பாபாவின் உறவினர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மார்ச் 28 ம் திகதி சாய்பாபா உடல்நிலை மோசமடைந்து சாய்பாபா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவரது நிலை குறித்த முழுமையான தகவல்கள் வரவில்லை. உடல்நிலை கவலைக்கிடம் என்று மட்டும் கூறி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ம் திகதியே சவப்பெட்டிக்கு ஓர்டர் கொடுத்துள்ளது சாய்பாபா அறக்கட்டளை. பெங்களூருவில் உள்ள "குமார் அண்ட் கோ இன்டர்நேஷனல்" என்ற கோவையைச் சேர்ந்த தமிழருக்குச் சொந்தமான சவப்பெட்டி  நிறுவனத்தில் தான் இந்த ஓர்டர் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.07 லட்சம் ஆகும். ரூ 57,000 முன் தொகை கொடுத்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ராஜேந்திர ரெட்டி என்பவர் இந்தப் பெட்டியை வாங்கி, அல்சூருக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து அந்தப் பெட்டி புட்டபர்த்திக்குச் சென்றுள்ளது. இத்தகவல்களை சவப்பெட்டி தயாரித்த நிறுவனத்தின் ஊழியர் விஸ்வநாத் விவரமாக ஊடகங்களிடம் தெரிவித்துவிட்டார்.
நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி கூறுகையில், "பாபாவுக்காகத்தான் அந்தப் பெட்டியைச் செய்தோம் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால் சாய்பாபா  உடல் கிடத்தப்பட்ட அந்தப் பெட்டியை தொலைக்காட்சியில் பார்த்ததும் உடனே புரிந்து கொண்டோம், அது எங்களுடைய தயாரிப்பு தான் என்பதை. எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது" என்றார்.
சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் தான் இந்தப் பெட்டியை வாங்கினர் என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பெட்டிக்கு ஓர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியைத் தொடர்பு கொண்டு அந்நிறுவன ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, "உண்மை தான். ஆனால் இதுபற்றி வெளியில் யாருடனும் பேசாதீர்கள்" என்று எச்சரித்தாராம். அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான நாகானந்தைக் கேட்டபோது, "இந்தப் பெட்டிக்கு ஓர்டர் கொடுத்தது சாய்பாபா உறவினர்கள் தான்" என்றார். மற்றொரு உறுப்பினரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி கூறுகையில், "இந்தப் பெட்டிக்கு எப்போது ஓர்டர் கொடுத்தனர் என்ற விவரமே எங்களுக்குத் தெரியாதே" என்றார் அதிர்ச்சியுடன்.
அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் ஜனார்தன் ரெட்டியும் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றார். பாபாவின் உடல்நிலை கவலக்கிடமாக உள்ளதாக தகவல் கொடுத்தது ஜனார்தன் ரெட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம்  முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். இவருக்கு வயது 85 .
கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டொக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டொக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டொக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
பகவான் சத்ய சாய்பாபா 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.
ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.
சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் திகதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார்.
தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டொக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940 மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். 

அவரது தந்தை “என்ன இது மாய மந்திரம்” என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா,”நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே” என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.
1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம் பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது.
2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.
சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.
“அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே” இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்

http://youtu.be/oNv_243mbJM

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP