பரராசசேகரம்



பரராசசேகரம் 8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக விளங்குகின்றது. முதலில் இது 12000 செய்யுள் கொண்டு விளங்கியதென்பர். இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத்திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம் பற்றியும், மூன்றாம் பாகத்திற் சுரரோக நிதானம், சன்னிரோக நிதானம், வலிரோக நிதானம், விக்கல்ரோக நிதானம், சத்திரோக நிதானம், ஆகியன பற்றியும், நான்காம் பாகத்தில் வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம் ஆகியன பற்றியும், ஐந்தாம் பாகத்தில் மேகரோக நிதானம், பிளவைரோக நிதானம், பவுத்திர ரோக நிதானம், வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி, ஆகியன பற்றியும், ஆறாம் பாகத்தில் உதரரோக நிதானம் பற்றியும், ஏழாம் பாகத்தில் மூலரோக நிதானம், அதிகாரரோக நிதானம், கிரகணிரோக நிதானம், கரப்பன்ரோக நிதானம், கிரந்திரோக நிதானம், குட்டரோக நிதானம் ஆகியன பற்றியும் கூறப்பட்டு, அவ்வவற்றின் குணமும் சிகிச்சையுந் தரப்பட்டுள்ளன.
தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது செய்யப்பட்டிருக்கின்ற தென்பதனை இதன் கடவுள் வணக்கச் செய்யுள்களுளொன்றாய
தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த
தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப்
பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்
சீரணியுந் திருமாலு மயனுங் காணாச்
சிவபெருமா னளித்தருளு மொருவெண் கோட்டுக்
காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்
கடவுளிரு பதபுயங்கள் கருத்துள் வைப்பாம்.
எனும் விருத்தங் கூறும்.
இதனைத் தமிழிற் செய்தார் யார் என்பதற்கான ஆதர மெதுவுங் கிடைக்கவில்லை. இந்நூல் பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்டதென்பதனை நூலின்கண் அவன் புகழ் சுறும் செய்யுள்கள் காட்டி நிற்கும். உதாரணமாக சுரசூலையின் சிகிச்சை பற்றி கூறும் செய்யுளில்,
பாரின் மேவுதிற லரச னானபர
ராச சேகரனை யண்டினோர்
சீரின் மேவிவளர் செல்வ மல்கவவ
ரின்மை தீருமது செய்கைபோல்
என்றும், நயனரோகம் பற்றிக் கூறுஞ் செய்யுளில்,
பார்மேவு மரசர்குல திலக மான
பரராச சேகரன்மால் பருதி யேந்தி
ஏர்மேவு முலகுபுரந் தருளி நாளி
லிசைத்தனனைங் கரத்தரியை யிறைஞ்ச லுற்றே.
என்றும், திரிபலைக் குழம்பு பற்றிக் கூறும் செய்யுளில்
பார்த்திவர்க ளேனுநோய் தொலைக்கு மீதே
பரராச சேகரன்மன் பணித்த செங்கோல்
காத்தபுவி யோர்களிரு ணீக்கு மாபோற்
கண்ணிலிரு ணீக்குமிது திண்ணந் தானே
என்றுங் கூறப்படுவதிலிருந்து, இது பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்ட நூலென்றறியலாம். ஆயின், எப்பரராசசேகரன் காலத்ததென்பதை நிச்சயமாக கூற ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே இப்பொழுது கூறத்தக்கதாயுள்ளது.
இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. ஆதியிலிருந்த பரராசசேகரம் என்ற நூலின் சில பகுதிகள் கிடையாமையால், அவை அச்சுப் பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று அதன் பதிப்பாசிரியர் ஏழாலை ஐ. பொன்னையாபிள்ளை கூறியுள்ளார்.
பரராசசேகரம் என்கின்ற இந்த வைத்திய நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது

Read more...

திருக்கரைசைப் புராணம்



திருக்கரைசைப் புராணம் என்ற நூல் “கரைசை” எனும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவதொன்றாகும். இப்பதி திருகோணமலைப் பகுதியில் மகாவலி கங்கைக் கரையோரத்திலே அமைந்துள்ளது. கரைசையம்பதியை அகத்தியதாபனம் எனவும் வழங்குவர். அகத்திய முனிவரே இதனைத் தாபித்தார் என்று இந்நூல் கூறும். இப்புராணம் சூதமுனியருளிச்செய்த வடமொழிப்புராணத்தினை தழுவிச்செய்யப்பட்டது என இப்புராணத்தின் வரலாறு கூறும் பகுதியில் கூறப்பட்ட போதும், தழுவப்பட்ட முதல்நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்நூல் செய்த புலவர் பெயர் தெரியாததாகையால், அவர் செய்த நூற்பெயர் கொண்டு, அவரைக் கரைசைப் புலவர் என்ற காரணப்பெயராலழைப்பர். எனினும், நூலகச் சான்று கொண்டு அவர் ஈசானச் சிவனைக் குருவாகக்கொண்டவரென்றும், “கொற்றங்குடி வாழும் பிரான் சரவணத்துறுதி” கொண்டவர் என்றும் தெரிகின்றது. இவற்றிற்காதாரமாக அந்நூற் குருவணக்கமாய
அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே
என்ற செய்யுளையும்
அதன் புராண வரலாறு கூறும் செய்யுள்களில்,
வண்ணமலி வடகலைக் கொடுமுடியாந்
தென்கலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாராநின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால்
அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தென்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே
ஆகிய விருத்தங்களைக் காட்டலாம்.
இவர் காலத்தை உறுதியாக கூறக்கூடிய சான்றுகள் ஏதும் இப்போது இல்லை. இப்புராணத்தை வே. அகிலேசபிள்ளை என்பார் 1893இலே பதிப்பத்து வெளியிட்டார்.
இந்நூலின்கண் கடவுள் வாழ்த்து, குருவணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப்பகுதிகளை விட இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களுள. இதனை ஒரு தலபுராணம் என்றே கொள்ளத்தகும்.

Read more...

யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை


பழமையும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை 18.01.1915 இல் உருவாக்கப்பட்டது. இதற்கு இந்து மகாசபை முக்கிய பங்கு வகித்தது எனலாம். இது ஆரம்பத்தில் இந்துக் கல்லூரி தமிழ் வித்தியாசாலை என்ற பெயரில் ஆண் பிள்ளைகளுக்கென ஆரம்பிக்கப்பட்ட தொன்றாகும்.


05.03.1927 இது தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. 1928 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இதன் தொடக்க நிலை வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் ஒரு சரரார் இந்துக் கல்லூரியின் வரலாற்றோடு இணைந்த தொடர்புடையது என்கிறார்கள்.
17.8.1951 இல் இக் கஸ்தூரியார் வீதியில் 244 ஆம் இலக்கத்தில் தற்போதுள்ள பாடசாலைக்கான அத்திவாரம் இடப்பட்டு 22.01.1954 இல் இயங்கத் தொடங்கியது.
21.01.1975 இல் இருந்து இந்துக் கல்லூரியின் நிர்வாக அமைப்பிலிருந்து முற்றாக விலகி யாழ். இந்து ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் தனித்துவமான கட்டடமப்புடன் ஆரம்பக் கல்விக்குரிய பாடசாலைகளில் சிறந்த ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது

Read more...

யாழ்ப்பாண நூல் நிலையம்


பொதுமக்கள் நூல்நிலையம்' என்னும் பெயரோடு முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் இன்று நிலைத்திருந்தால், அதற்கு வயது 140 ஆகும். அது 1842 ஆம் ஆண்டில் பெரிய நீதிமன்றக் காரியதரசியாயிருந்த எஃப். கிறினியர் என்னும் பெரியாரால்

Read more...

யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்


யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் என்பதை நோக்குவதற்கு முன்னர் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகும். பண்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மேலைப்புல அறிஞர்கள் 160க்கும் மேற்பட்ட வரையறைகளைத் தொகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் எமக்குப் பொருத்தமான சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட

Read more...

யாழ்ப்பாணம் என்ற பெயர்


யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடியும்.சோழ நாட்டில் இருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் தென

காலப்போக்கில் குடாநாடு முழுவதற்கும் அப்பெயர் வழங்கப்பட்டது

Read more...

யாழ்ப்பாணக் கோட்டை

இலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை இன்றும் பறைசாற்றுகின்றன.

ஊர்காவற்றுறை கோட்டை, காங்கேசன்துறைக் கோட்டை, வெற்நிலைக்கேணி கோட்டை என்பன கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இயக்கச்சி கோட்டை, ஆனையிறவுக்கோட்டை, பூநகரிக்கோட்டை என்பன பாதைக்கடவைகளில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இத்தகைய நிலைய முக்கியத்துவத்தினால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப்பது எளிதாகவிருந்தது.

யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் இன்றும் கோட்டை காணப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்ட கோட்டையாகும்.

யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் மிக அற்புதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் கீழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான கோட்டை என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.

முதலில் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்தது. பின்னர் போர்த்துக்கேயர் அப்பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கினர். ஒல்லாந்தர் இக்கோட்டையைப் புனரமைத்தனர். முதலில் ஐங்கோண வடிவில் உள்கோட்டையின் வடிவம் அமைக்கப்பட்டது. இதனை 1680 இல் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 1792 இல் நிறைவுற்றது.

யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. உள்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்கத்தளம் 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை. இக்கோட்டைகள் கடற்கரையோரங்கனில் அல்லது பாதைக் கடவைகளில் அமைந்திருந்தன.

யாழ்ப்பாணக்கோட்டைக்குள் கவனர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் வைத்து கைதிகள் விசாரிக்கப்பட்டார்களாம். கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று `கடற்பாதை மற்றையது நிலப்பாதை. `கடற்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறம் நிலப்பாதையாகும். கோட்டைக்குள் தென் கிழக்குப் பகுதியில் ஒரு சதுரங்கத் தேவாலயம் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடங்கள் எதனையும் காணமுடியாது.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்ற சதியொன்று நடந்தது. நல்லூர் முதலியாராகவிருந்த பூதத்தம்பி என்பவன் இதில் பங்குபற்நினான் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மையமாக யாழ் கோட்டை விளங்கியதால் அதை இராசவாசல் என சிறப்பாக அழைத்தார்கள்.

Read more...


இலங்கை நாட்டின் வட மாகாணத்தின் முடிவு எல்லையில் யாழ் மாவட்டம் அமைந்துள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து கிட்டத்தட்ட 410 கிலோ மீற்றர் தொலைவில் யாழ்ப்பாணம் உள்ளது. 7 தீவுகள் அடங்கலாக யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 1025 சதுர கிலோ மீற்றர்களாகும். யாழ் மாவட்டம் தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

யாழ் குடாநாடு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இந்தியப் பெருங்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லைகளாக யாழ்ப்பாண கடனீரேரியும் கிளிநொச்சி மாவட்டமும் அமைந்துள்ளன. தரைவழியாக ஆனையிறவு கடநீரேரியை கடந்து யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்ஆனையிறவு கடநீரேரி இலங்கையின் மிக முக்கியமான உப்பளங்களில் ஒன்றாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசம் பிரபலம் அடைய வேண்டும் என்றால் அங்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் யாழ்பாணத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பலாலி விமானநிலையமும் காங்கேசந்துறை துறைமுகமும் அங்குள்ளன. இவற்றின் மூலம் யாழ் மாவட்டத்திற்கான தொடர்புகள் மேலும் இலகுபடுத்தப்படுகின்றன. ஒரு காலங்களில் யாழ்ப்பாணத்தின் இளவட்டங்கள் காலையில் படகு மூலம் தென் இந்தியாவிற்கு சென்று அங்கு வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை பார்த்துவிட்டு மாலையில் திரும்புவது வழமையாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வயதில் பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்களின் இளவயது நினைவுகள் எமக்குத் தெரியவரும்.

யாழ் மாவட்டம் ஒரு உலர் வலயப் பிரதேசமாகும். இங்கு பனை மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் திடல்களாக பரந்து விரிந்துள்ளன. பழங்காலங்களில் பெண்களுக்கு சீதனம் வழங்கும்போது பனந்திடல்களை வழங்கினார்கள். அதனால் முழுக்குடும்பமுமே பசி, பட்டினி இன்றி வாழ்ந்ததுடன் பனந்திடல்களை வழங்குவதை அவர்கள் கௌரவமாக நினைத்தார்கள்.
ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மூலம் இங்கு மழை வீழ்ச்சி கிடைக்கிறது. இப்பகுதி மக்கள் இப்பருவப்பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு நெல்லை பெரும்போகமாக பயிரிட்டு அறுவடை செய்து வருடம் முழுவதும் வளத்தோடு வாழ்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இம்மாவட்டத்திற்கு 1811.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியைப் கிடைக்கப்பெற்றுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவான வெப்பநிலை இங்கு காணப்படும். இம்மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 21.40 தொடக்கம் 32.40 சென்ரிகிரேட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இங்குள்ளவர்கள் சிறுபோககாலங்களில் பயறு, உழுந்து, சணல், கௌபி, தினை, குரக்கன், சாமை போன்ற சிறு தானியங்களை பயிரிட்டு தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் புகையிலை, முந்திரி, வெங்காயம், மிளகாய், மாம்பழம், பலாப்பழம், வெற்றிலை, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் நல்ல கிராக்கி காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான தொழில்களாக விவசாயமும் மீன் பிடியும் காணப்படுகிறது. விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ் மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தமது உள்ளூர் சந்தைத் தேவையையும் நிறைவு செய்வது மட்டுமல்லாமல் தென்னிலங்கைக்கும் மீன்கள் மற்றும் கருவாடுகளை அனுப்பும் திறமை அவர்களிடம் உண்டு.
இவ்வாறு தன்னிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழும் யாழ்ப்பாணம் பற்றிய பல்சுவை விபரங்களைத் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

Read more...

யாழ்வீதி வழிகாட்டி



>>A9 வீதியூடாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வதாயின் கிட்டத்தட்ட 410 km தூரத்தைக் கடந்து யாழ் நகரை அடைய முடியும். தற்போதைய வீதி அமைப்பின்படி கொழும்பில் இருந்து யாழ் நகரை சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் தேவைப்படுகிறது.

>>கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாஞ்சேனை ஊடாக நீர்கொழும்பு வீதியை அடைந்து A3 பாதையூடாக களனிபாலம், வத்தளை, மாபொல, கந்தான, ஜாஎல, சீதுவ, கட்டுநாயக்க, வென்னப்புவ, கட்டுநெரிய, மாரவில, மகாவெவ, சிலாபம், ஆராச்சிகட்டிவ ஆகிய இடங்களைக் கடந்து புத்தளம் நகரை அடைய வேண்டும்.

>>புத்தளம் A10 வீதியூடாக கருவெலகஸ்வெவ, நொச்சியாகம, அனுராதபுரம் ஊடாக யாழ் சந்தியை சென்றடந்து A20 வீதியூடாக சென்று கண்டி வீதியில் மதவாச்சியை சென்றடைய வேண்டும்.

>>பின்னர் A9 வீதியூடாக வவுனியா, புளியங்குளம், மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, பளை, கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், கைதடி, நாவற்குழி, மாம்பழசந்தி, கச்சேரியடி ஆகிய இடங்களைக் கடந்து யாழ் நகரை சென்றடைய முடியும்.

Read more...

யாழ்ப்பாணம்



யாழ்ப்பாணம் என்பது இன்றைய நிலையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தையும், அங்குள்ள தீவுகளையும் குறிக்கும். யாழ்ப்பாணத்தில் 14ஆம் நூற்றாண்டு முதல் ஓர் அரச அமைப்பு நிலவியது. அது போர்த்துக்கேயர் வருகை வரை நிகழ்ந்தது (1520).

ஒல்லாந்தர் காலம் முதல் அதன் பொருளாதார நிலைப்பட்ட நிர்வாக, நடவடிக்கைகள், அப்பிரதேசத்துக்குரிய "தேச வழமை" முறைப்படியே நடைபெற்றது. இதனால் யாழ்ப்பாணச் சமூகத்தின் தனித்துவம் தொடர்ந்து பேணப்படுவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மிஷனரிமார்களின் நடவடிக்கைகள் இங்கு குறுகிக் காணப்பட்டன. இதனால் காலனித்துவ ஆட்சிக்கு வேண்டிய இடைநிலை உத்தியோகங்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நிறைய இடம்பெற்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில், இந்நிலைமை யாழ்ப்பாணத்தவர்களுக்கெதிரான சமூக, அரசியல் கோரிக்கைகள் வைக்கப்படுவதற்கும் காரணமாயிற்று.

யாழ்ப்பாணச் சமூகம் காலனித்துவத்தை எதிர்நோக்கிய முறையில் முதலில் சமூக மேலாண்மையுடைய மட்டத்தினர் தங்கள் பாரம்பரியத் தொடர்ச்சிக்கும் பேணுகைக்கும் வேண்டிய அதிகாரத்தினை, சைவக் கருத்து நிலை வழியாக ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் கருத்து நிலை மேலாண்மை, யாழ்ப்பாணத்தின் சமூக வேறுபாடுகளை முதன்மையிழக்கச் செய்து, யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஓர் ஒருமைப்பாடான கருத்தினை முன்னிலைப்படுத்திற்று.

இந்த மதநிலைப் பேணுகை ஒரு புறத்தில் தொழிற்பட இன்னொரு புறத்தில் ஆங்கிலக் கல்வி வழியாக வந்த ஒரு தாராண்மைவாதப்போக்கும் தொழிற்பட்டது. யாழ்ப்பாண மாணவர் காங்கிரசையும், அதன் தோல்வியின் பின்னர் வந்த மார்க்சீயச் சிந்தனைப்போக்கையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட அரசியல், சமூகப் பாரம்பரியங்கள காரணமாக, யாழ்ப்பாணமே இலங்கைத் தமிழர்களை சின்னப்படுத்தியும் (Symbolising), பிரதிநிதித்துவப்படுத்தியும் நிற்கின்ற ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியற் பிரக்ஞை வளர்ச்சியில் யாழ்ப்பாணம் நீண்டகாலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

இந்த "முதன்மைகள்" காரணமாக, யாழ்ப்பாணத் தமிழர், மற்றைய தமிழ்ப் பிரதேசங்களில் எதிர்க்கப்படுவதற்கான ஒரு சூழலும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலவியது உண்மையே.

சைவக் கருத்து நிலை காரணமாக யாழ்ப்பாணத்திற் சமூக அடுக்கமைவு உணர்வு வலிமையுடன் போற்றப்பட்டு வந்ததெனினும், சாதிமுறைமைக் கெதிரான போராட்டங்களும் அங்கு நிலவின.

கத்தோலிக்க புரட்டஸ்தாந்தவர்களும், முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ளனர்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP